The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

Poem

இனியவை

​இனியவை இனியதாய்  இசைந்தது இங்கே – இவன்  இசையென்று இன்பமாய்  இதயமெங்கும் இறைந்ததிங்கே  இயற்கையை இழைத்தான் இன்பத்தை இணைத்தான்   இதமாய் இன்னிசையாய்  இம்மனதை இறுக்கினான் 

0

இறைபொருள்

​புன்னகையின் பொருளோடு புவிதனில் நீ வந்தாய் – சிற்பியின் உளியெல்லாம் உன் கதை பேசின இமையாடும் இடையாடும் வளையாலாடும் இசை கேட்டும்  – நடனங்கள் மானிடரின் கலையாயின புயலொன்று புலம்பெயர்ந்து உன் பாதத்தில் குடி கொண்டு – வழியெல்லாம் கண்டோரை வேரோடு சாய்க்கிறது மன்மதனின் நிழல் கண்டு  ஒதுங்காத பெண்களுண்டு – உன் மூச்சை சுவாசிக்க… Continue Reading →

20

​துயில் களைந்த வேளையில்

​துயில் களைந்த வேளையில் காகங்கள் கரையும் இசையில்  மெல்ல திறந்த இமைகளுடன் நாற்திசை பரவிய முடிகளுடன் சோம்பலை முறித்தெழுந்தேன் சட்டென்று புன்னகைத்தேன்  சற்றுமுன் மறைந்த கனாவை எண்ணி நீண்ட நெடும் சாலையிலே  அந்தி சாயும் வேளையிலே – நம் பாதொலிகள் மட்டும் திசையெங்கும் தெறித்தது கீச்சிடும் கானம் தரும் குருவிகளின் திட்டப்படி மௌனங்கள் விழுந்தன  நம்… Continue Reading →

1

வேண்டுகோள் 

​என்னுடன் விளையாட வேண்டும்  சிறு பிள்ளையாய் துரத்த வேண்டும்  கைகளை கோர்த்து கொண்டு   கீச்சிடும் குரலுடனே குயில்களை  மிரட்டி ஓட  வேண்டும்  கருத்த இரு விழிகளிலே கட்டெறும்பை  நோட்டம் விட்டு வழி மறிக்க வேண்டும்  பின் கடி பட்டு ஊர் பார்க்க அழ வேண்டும்  வெண்பற்களை காட்டி சிரிக்கவும் வேண்டும்  ருசி கொண்ட பண்டங்களை… Continue Reading →

16

நான் அறியேன்

​வீசும் காற்றினிலே  விடலை  அவள் கூந்தல் காணவில்லை எவ்விடமும் செல்லாமல்  இவ்விடம் வா என ஈர்க்கும் அவள் கண்களும் காணவில்லை  நித்தம் அந்த தனிமையிலே மௌனத்தில் வசீகரிக்கும் அந்த நிழலும் தோன்றவில்லை  எண்ணத்தில் நிலை கொண்டு  என் எழுத்திலே வளைந்தோடும் அந்த பெண்ணே இதை நீ வாசிப்பாயோ  நான் அறியேன் …. உள்ளத்தில் குடி கொண்டு … Continue Reading →

4

நீயோ ? 

​பூக்கள் தேடும் புகலிடம் நீயோ புன்னகையில் வருடும் மென்சிலிர்ப்பு நீயோ நேர் நின்ற புற்களை வளைய விட்டு அசைந்தோடும் நீரோட்டமோ – அதில் எதிர்த் திசை தேடி குதித்து வரும் சிறு மீனோ ஒற்றை காலில் நிற்பது நீயோ ஓடைத் தோணியில் மிதந்து வருவதும் நீயோ கற்றவன் எழுதிய கவியும் நீயோ கற்பவன் பயிலும் கருத்தும்… Continue Reading →

0

என்ன எழுத ?

​மீண்டும் மீண்டும் உனை பற்றியே எழுத சொல்கிறாயே – நான்  என் எழுதுவேன் ? ஓயாமல் எனை சுற்றும் உன் நினைவை அகல சொல்லி எழுதவா ? கவிஞன் என்று கூறாமல் எனை  காதல் பித்தன் என்று சொல்வதை  உன்னிடம் முறையிட்டு எழுதவா ? இயற்கையை தான் எழுத தொடங்கினேன்  மெல்ல அசைந்தாடும் அந்த பூவிதழ்களில்… Continue Reading →

0

கண்களுக்கு முத்தம்

கருவில் உரு கொண்டு வெளி கொணர்ந்த – அந்நாளில் இவள் தான் உன் பிரம்மம் என காட்டிட்ட அக்கண்களுக்கென் முத்தம் சிறு பிஞ்சு விரல் கன்னங்களை கிள்ளி விட்டு – என் போட்டியாய் வந்தவனே என கோப அன்பையுணர்த்திய – என் பிரம்மத்தின் கருவறையை என்னுடன் பகிர்ந்தோரை காட்டிட்ட அக்கண்களுக்கென் முத்தம் அடியெடுத்து வெளிவந்து புதிய… Continue Reading →

0

படைத்தான் இவன்

அழகு சொல் பெயர்த்தெடுத்து அங்கம் செய்தான் கவிதரு இன்னோசை அதனுட் புகுத்தினான் மோகன யுகஞ்செய் தானுடனனுப்பினான் மென்னுடற் மண்பட்டு விளைந்த நயத்துடன் இலக்கணம் படைத்தான் ஆதிப்பெற்று அந்தமற்ற புகழ் கொடுத்தான் ஓசை தந்த உவமை கொண்டு உருவஞ் செய்தான் தெற்கு கண்ட மேவதிலே குடிபெயர்ந்தான் கடற்சேர் புண்ணாற்றுடன் நாகரீக தனை கொடுத்தான் இன்னாகி இன்புறும் காவியம்… Continue Reading →

94

மாதத்தின் ஓர் நாள்

விழி மூடி உறங்குவதாய் நான் பாசாங்கு செய்திருந்தேன் – அட தரையில் கிடக்கிறாயே என் செல்லமே என்று எனை மெத்தையில் கிடத்தினாள். நடிப்பில் அன்று நான் கெட்டிகாரனாக இல்லாததால் இமை திறந்து பார்த்துவிட்டேன் கீச்சென்று கத்தியும் விட்டேன் – என்னிடமே நடிக்கிறாயா என்று என் கன்னத்தை கிள்ளி விட்டாள் – நான் எழுந்து ஓட துரத்தியும்… Continue Reading →

7

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்