​மீண்டும் மீண்டும் உனை பற்றியே

எழுத சொல்கிறாயே – நான் 

என் எழுதுவேன் ?

ஓயாமல் எனை சுற்றும் உன்

நினைவை அகல சொல்லி எழுதவா ?

கவிஞன் என்று கூறாமல் எனை 

காதல் பித்தன் என்று சொல்வதை 

உன்னிடம் முறையிட்டு எழுதவா ?
இயற்கையை தான் எழுத தொடங்கினேன் 

மெல்ல அசைந்தாடும் அந்த பூவிதழ்களில்

உன் முகம் வந்து மறைவதை கண்டு 

இயற்கையை உன் காலடியில் வைத்தே 

எழுதி விடுகிறேன் !!!

என்ன எழுத ?

Credits : Google images

சிறப்பிற்கே உரித்தான தமிழ் மொழியினை – என் 

தாய் மொழியின் பெருமையை விளக்கவே 

எழுத தொடங்கினேன் – உயிர்மெய் 

எழுத்துக்கள் கலந்தெழுதும் பொழுது – உன் 

மெய் எந்தன் விழி நிரம்பிவிடுவதால் 

உயர் பேனாவின் மையோ உனைத் தாளில்

நிரப்பிவிடுகிறது !!!
பெண்ணே! 
சுற்றமும் 

படர்ந்திருக்கும் உன்

சிறு சிறு நினைவுகளும் – என்னுள்

ருத்ர 

தாண்டவம் தான் !!!!!

0