அத்தனை வேகமாகவா கடந்து விடும்
அந்த நொடி

யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை
என்றதும்

மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை
விலக்கி விட்டு

உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை
அடைந்து விட்டு

எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள்
பதிந்து விட

சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள்
ஏற்படுத்திய மாயம்

நொடியினும் குறைந்த அந்த அரை மாத்திரை
பொழுது

முழுதாய் முத்தமாய்

நான் ஆகி போக

இருப்பிடம் யாதும் தேவையின்றி
இன்றுவரை ஈரப்பதம் நிறைந்திட
அவள் உதடுகளின் இடுக்கனிலே

இருக்கிறேன்

இசையூற்றாய்

முழுதாய் முத்தமாய்…

132