அவள்

வார்த்தைகளின்
ஒலி வடிவத்தை
வற்ற செய்தவள்

பட படப்பாய் என்றும் என்
படர்ந்த மார்பினில் ஓர்
இறுக்கத்தை தருபவள்

சிந்திக்க சிந்திக்க
இதழினில் ஈரப்பதம் குறைந்திட
இரவெல்லாம் விழிக்க செய்பவள்

சிரிப்பதை யாரிடம் கற்றாளோ
எவற்றையும் ஈர்க்கும் வசீகரத்தை
நுணுக்கமாய் அதிலடக்கி யிருக்கிறாள்

எத்தனை எத்தனை உணர்வுகளோ
அத்தனையும் ஒரு சேர – நேராய்
எனை நோக்கி

அவள்

பார்வையாய் வார்த்தையாய்
அசைந்தாடும் கூந்தலின்
அழைக்கின்ற வாசமாய்

நித்தம் அந்த காற்றுடனே
வந்து சேரும் போது
என் செய்வேன்

இமைகளுக்கு விடுப்பு தந்து
காட்சிகளை கச்சிதமாய் கோர்வையாய்
சேமித்து கொள்கிறேன்

142