அழகிய குறும்படகு
நீண்டதொரு பயணம்

தனிமையின் சோகம் வெறுத்து சேர்த்தேன் சில நண்பர்களை

கை வலிக்கப்
படகு வலித்தேன்

‘உன்னைப்போல் படகு எனக்கு இருந்த்தால் நன்றாக இருந்திருப்பேன். உன்னையும் பார்’ என்றாள் ஒருத்தி.

‘ தேவை இல்லாமல் அடுத்தவர்களை சுமக்கிறாய் ‘ என்றாள் மற்றும் ஒருத்தி தன்னையும் நான் சுமப்பதை மறந்து.

‘அவர்களை விடு.
உதவ நான் இருக்கிறேன். ‘ நம்பிக்கையாய் இன்னும் ஒருத்தி.
ஆற்றில் ஒருவன்
‘அபாயம் அபாயம்’ என்றான்.
நீரில் மூழ்கி நின்றான்.

கை கொடுக்க எண்ணினேன் கிட்டவில்லை அவன் கை.

இறங்கி நீந்தினேன்.
அவனைக் காணவில்லை

‘அவனுக்கா இந்த நிலைமை? ஆண்டவா!’ என மேலே பார்த்தேன்.
மர உச்சியில் அவன்.

நீரில் பிம்பத்தைக் கண்டு
காப்பாற்ற எண்ணிய
என் மடமையை உணர்ந்தேன்.

படகு தூரத்தில்…

‘ உன்னைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டாள் ஒருத்தி.

‘ அவள் சுயநலக்க்காரி.
நம்மைத் துடுப்பு வலிக்க வைத்து விட்டாள்’
எனப் புலம்பினாள் மற்றொருத்தி.

‘ உதவ நான் இருக்கிறேன் ‘ என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்த்தாள்
நம்பிக்கைக்கு உரியவள்.

‘ உன் முட்டாள் தனத்துக்கு
என்னைக் குறை சொல்லாதே !
நான் நல்லவன் தான்’ என்றான் மர உச்சியில் இருந்து கொண்டே ..
வாழ்க்கைப் படகு என்னை விட்டு போய்க் கொண்டே..

நீந்தினேன்….

மன உளைச்சல் எனும் சுழலைக் கடந்து ,
சோகம் எனும் முதலைகளை வென்று ,
குழப்பம் எனும் புயலில் போராடி, கைப்பற்றினேன் படகை ….
வேண்டாதோரை விரட்டி அடித்தேன் !!வேண்டியோரை விரும்பி அழைத்தேன் !!

இனி துடுப்பு என் கையில் …!
ஆம்! நான் இரக்கமில்லாதவள் !!வேண்டாதோருக்கு !!!

— கீதா

விருதுநகர்

4