#அந்த பெரியார் வீதியில்
நேர்த்திக்கடன் நடக்காமலுமில்லை

#நொந்த கருப்புச்சட்டை எதிர்ப்பை
பூர்த்தி செய்யாமலுமில்லை – கல்வி
#தந்த காமராசர் தெருவில் பாலகன்
யாசகனாகாமலுமில்லை

#கந்தையான மனதிலும் அரசாங்கம்
சலுகைகள் தராமலுமில்லை

#விந்தையான காந்தி பூங்காவில்
கொடூரக்கொலை நடக்காமலுமில்லை

#மந்தமான நீதியதும் குற்றமதை
பதிவு செய்யாமலுமில்லை

#சிந்தையைத் தூண்டிய அறிஞர்
அண்ணாசிலை எதிரே அந்நியமொழி
பள்ளித் திறக்காமலுமில்லை – தீப்
#பந்தமாக அதை அருந்தமிழர் நாம்
எதிர்க்காமலுமில்லை

இத்தனையும் நாம் பார்க்காமலில்லை
பார்த்தும் கேட்காமலில்லை
கேட்டாலும் கிடைக்கப் போவத்தில்லை
கிடைத்தும் நாம் திருந்தப்போவதில்லை
ஏனெனில் இதுநம் நாடென நாம்
நினைப்பதேயில்லை … !!

#கவிதை_சிறுவன்

— அருண்குமார்
கோயமுத்தூர்

1