​வீசும் காற்றினிலே  விடலை 

அவள் கூந்தல் காணவில்லை

எவ்விடமும் செல்லாமல்  இவ்விடம்

வா என ஈர்க்கும் அவள் கண்களும்

காணவில்லை 

நித்தம் அந்த தனிமையிலே

மௌனத்தில் வசீகரிக்கும் அந்த

நிழலும் தோன்றவில்லை 

எண்ணத்தில் நிலை கொண்டு 

என் எழுத்திலே வளைந்தோடும் அந்த பெண்ணே

இதை நீ வாசிப்பாயோ 

நான் அறியேன் ….

உள்ளத்தில் குடி கொண்டு 

எழுத்தினில் உரு பெற்றாய் 

சற்று என் உயிருக்கு உணவளிப்பாய்

நின் காட்சி தருவாய் 

மென் காற்றதிர ஒலி தருவாய் …

4