இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து இதம்தரும் வீணை இசையது கவிதை வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை புத்துயிர் இயற்கையின் வற்றாத… Continue Reading →
1உதிரத்தால் எனை உயிர்த்தவளே இடை பெருகி உருக எனை இழைத்தவளே மூப்பில்லையடி தாயே உன் இளமுகம் முதிர் என் கண்களுக்கு என் முதலகத்தை இன்றும் நீ வைத்திருக்கிறாய் அதை தொழுது வணங்கிட வேண்டுமடி – அந்நருள் புரிவாயடி எனக்கு தூக்கமின்றி நான் புரளும் போதெல்லாம் உன் கை விரல்கள் என் தலை முடியை கோதுமடி அப்படியே… Continue Reading →
14Evening times are always special for me. Which inspires me always to think confidently about the future and gives me sweet memories of my childhood.
31நீயும் நானும் செல்லும் அந்த சாலையில் சிதறிடும் திடீர் தூரல்கள் யாவும் நின் முகத்தினில் படரும் மெல்ல ஓடிச் சென்று நிழல் தரு மரமடியில் நிற்கையில் இலைச் சொட்டும் துளியதுவும் நின் கூந்தலில் தங்கும் மென் கைப் பாதங்களை மெதுவாய்த் தேய்த்து கொண்டு கருமேக வானத்தை இரசிக்கும் நின் பார்வையில் குளிரது சற்று மிளிறும் நனைந்திட்ட ஆடைதனில்… Continue Reading →
3முல்லை நிலத்தினிலே யாங்கு வீரம் செறிந்திருக்க தமிழ் மானம் ஊறியிருக்க – உடன் மரபு அதன் அடையாளம் பரவியிருக்க துடித்திடும் மீசையுடன் ஆங்கு என்குல இளைஞர்கள் பொழுதுபோக்கிலும் இயற்கை இயைந்திருக்க சீறிடும் காளையை கையாலும் எங்கள் வீர விளையாட்டடா எதிர்ப்பவன் என் முன் வந்து நில்லடா ஏதடா நீ அறிவாய் தரணியை ஆண்டவர்கள் நாங்கள் ஏறு… Continue Reading →
6ஏன் ஏனோ அந்த தருணம் மனம் முழுதும் படரும் ஓர் உணர்வு நீ நீயோ அந்த சாலை தனை கடந்தாய் முகம் முழுதும் உடன் கன்னி சிரிப்பும் பார் பார்க்கும் ஓர் அழகை இரு விழியில் கொண்டாய் – முழுதும் அதில் கரைந்தேன் முதலில் ஏன் ஏனோ அந்த தருணம் சில வார்த்தை வர மறுக்கும்… Continue Reading →
30உறங்கினள் உண்டினள் இல நின் வருகை வரை வருந்தினள் வதங்கினள் நின் நோய்த்தீர் வரை இரசித்தினள் இன்புற்றனள் நின் உணவு தீரும் வரை உச்சி முகர்ந்தாள் உறவை தவிர்த்தாள் முலை கொடுத்தாள் பேறு அடைந்தாள் நின் மழலை நடை நினைவிற் பதித்தாள் – உடன் கொஞ்சல் மொழியை அமிர்தாய் சுவைத்தாள் கொண்டணள் கொடுத்தனள் ஈடில்லா அன்பினள்… Continue Reading →
2பல நிறத்தவன் வாழும் உலகினில் ஒரு நிறத்தவன் நாணாத போது கைக் கூசாமல் வாங்கிய போது இடம் தெரியாமல் மறைத்த போது மற்றவன் விழிப் பிதுங்க இருந்த போது இன்னொருவன் ஏதும் செய்யாமல் பார்த்த போது அடக்க வேண்டியவன் அடங்கியிருந்த போது அட போங்கய்யா மாறும் மாற்றமும் மாறாதது. #blackmoney #demonetisation
4பார்பவையற்றை யெல்லாம் எழுதிட வேண்டும் – அவை பாவையின் முகமதி போல் இருந்திடல் வேண்டும் துயில் களைந்து எழுந்து முகங்கழுவி தெளியுமுன் – அவள் துஞ்சு முகம் நெளித்த சோம்பலை எழுதிடல் வேண்டும் இதழ் தந்த சொற்கள் யாவும் அப்படியே வேண்டும் – எழுது கோலும் நெளிந்து சிவக்கும் வண்ணம் அவை இருந் தெய்திடல் வேண்டும்… Continue Reading →
24ஜதிகளின் நுட்பம் மலர் பாதங்களினூடே – இமை கூர்மையில் நெளிகிறது நளினத்தின் நயங்கள் மங்கை இடைச் சொல்லும் – வழியே அசைவினில் துளிர்கிறது சுடர்களின் கதிர்கள் தண் முகமதில் கொட்டிட்டே – கன்ன சிவப்பினில் மிளிர்கிறது விழித்திரையின் காட்சிகள் யாவும் நினைவு தட்டும் – உயர் புதினத்தில் ஒளிர்கிறது கொட்டும் தாளங்கள் நின் சலங்கை பண்ணூடே… Continue Reading →
47