இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை
உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை

எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து
இதம்தரும் வீணை இசையது கவிதை

வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை

உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை

மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை

புத்துயிர் இயற்கையின் வற்றாத ஊற்று ஒரு கவிதை

சொக்கும் விழியின் பக்குவமறிந்து

விக்கும் தொண்டையின் ஆர்வம் தெரிந்து

நடுங்கும் கரத்தின் நளினம் புரிந்து

சிவக்கும் கன்னத்தின் வெட்கம் சுவைத்து

வாடும் உதட்டை பதமும் உழுது

பொங்கும் உள்ளத்தில் தங்கும் இந்த கவிதை…

1