முல்லை நிலத்தினிலே யாங்கு வீரம் செறிந்திருக்க 

தமிழ் மானம் ஊறியிருக்க – உடன் 

மரபு அதன் அடையாளம் பரவியிருக்க 

துடித்திடும் மீசையுடன் ஆங்கு என்குல இளைஞர்கள் பொழுதுபோக்கிலும் இயற்கை இயைந்திருக்க 

சீறிடும் காளையை கையாலும் எங்கள் வீர விளையாட்டடா 

எதிர்ப்பவன் என் முன் வந்து நில்லடா 

ஏதடா நீ அறிவாய் 

தரணியை ஆண்டவர்கள் நாங்கள் 

ஏறு தழுவுதல் எங்கள் வீரத்தின் தகுதியறியும் ஓர் போட்டி 

என்றும் அனுமதியோம் என் வீர தமிழினத்தின் அடையாளம் அழிவதை 

என்றும் அனுமதியோம் எங்கள் காளையினம் மறைந்தழிவதை 

வாழ்க தமிழ் 

Image credits : google images

0