The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Author

Murugan D

என் கண்ணா

​விரல் கொண்டு இசைத்தாயோ  என் உயிர் மயங்க செய்தாயோ  நித்திரையின் நாடகமோ  புதிர் போடும் காவியமோ  இசைந்திடாத உயிருண்டோ  அசைதிடாத ஜடம் உண்டோ  கசிந்திடும் நீரை போல்  உயிரை சொட்ட சொட்ட பிடித்து புல்லாங்குயலின் விட்டாயோ… ! உறைகின்ற நீரும் ஓர் நாள்  கரைந்திடும்  மறவாது ஒரு நாளும் உன்  முகம் கண்ட என் மனது… Continue Reading →

18

கண்ணா 

​நித்தம் ஒரு மலர் பறித்து  கசங்காமல் நூலில் கோர்த்து  வாடும் தனை முன்பே  கணவான் நின் மாலையாய்  சூட  தினம் நீரது கொண்டு செழிக்க  உயிரது வேருன்ற  வெய்யோனின் கதிர் படர  வளர்ந்தது இந்த மலர் செடியே  பசுமை நிறைந்திருக்க  வந்து பறிக்க பலர் இருக்க  நின் மார்போடு தழுவி மகிழவே  மலர்களை உதிர்க்க செய்தது … Continue Reading →

1

என்னவனே 

​வசந்தத்தில் பிறந்தவனே எனை மழைநீராய் நனைத்தவனே துளித்துளியாய் மேனிப்பட்டு சட்டென்று இறங்கியவனே விடியல் பொழுதைப்போன்றே  பகலெல்லாம் மாற்றி – புது பார்வையில் நின்றவனே…. குளிரென்ற பெயராலே – உன் தோள் மீது நான் சாய என் அருகிலேயே இருப்பவனே … தனியாக மழை நீரை இரசிக்கிறேன்  புரண்டோடும் ஓடையாய் – உன்  இடம் நாடி வருவேன் … Continue Reading →

8

ஏக்கம்

​வெறும் கையில் முகம் மறைத்து நிலவே உனை காணாமல்  முட்தரையில் புரளுகிறேன் விலகிவிடு என்று ஒரு வார்த்தையில்  உனை கூறிவிட்டு – ஒவ்வொரு நொடியும் கண்ணீர் வடிக்கிறேன்  உடைந்த பொம்மையை எறிய  மறுக்கும் குழந்தைப்போல் – நம்  நினைவுகளை புதைத்து வைக்கிறேன் பரந்த வானத்தின் வெண்மேகத்தை இமைக்காமல் பார்க்கிறேன்  இருள் வந்து சேர்ந்து – மின்னும் … Continue Reading →

4

இனியவை

​இனியவை இனியதாய்  இசைந்தது இங்கே – இவன்  இசையென்று இன்பமாய்  இதயமெங்கும் இறைந்ததிங்கே  இயற்கையை இழைத்தான் இன்பத்தை இணைத்தான்   இதமாய் இன்னிசையாய்  இம்மனதை இறுக்கினான் 

0

இறைபொருள்

​புன்னகையின் பொருளோடு புவிதனில் நீ வந்தாய் – சிற்பியின் உளியெல்லாம் உன் கதை பேசின இமையாடும் இடையாடும் வளையாலாடும் இசை கேட்டும்  – நடனங்கள் மானிடரின் கலையாயின புயலொன்று புலம்பெயர்ந்து உன் பாதத்தில் குடி கொண்டு – வழியெல்லாம் கண்டோரை வேரோடு சாய்க்கிறது மன்மதனின் நிழல் கண்டு  ஒதுங்காத பெண்களுண்டு – உன் மூச்சை சுவாசிக்க… Continue Reading →

27

​துயில் களைந்த வேளையில்

​துயில் களைந்த வேளையில் காகங்கள் கரையும் இசையில்  மெல்ல திறந்த இமைகளுடன் நாற்திசை பரவிய முடிகளுடன் சோம்பலை முறித்தெழுந்தேன் சட்டென்று புன்னகைத்தேன்  சற்றுமுன் மறைந்த கனாவை எண்ணி நீண்ட நெடும் சாலையிலே  அந்தி சாயும் வேளையிலே – நம் பாதொலிகள் மட்டும் திசையெங்கும் தெறித்தது கீச்சிடும் கானம் தரும் குருவிகளின் திட்டப்படி மௌனங்கள் விழுந்தன  நம்… Continue Reading →

2

வேண்டுகோள் 

​என்னுடன் விளையாட வேண்டும்  சிறு பிள்ளையாய் துரத்த வேண்டும்  கைகளை கோர்த்து கொண்டு   கீச்சிடும் குரலுடனே குயில்களை  மிரட்டி ஓட  வேண்டும்  கருத்த இரு விழிகளிலே கட்டெறும்பை  நோட்டம் விட்டு வழி மறிக்க வேண்டும்  பின் கடி பட்டு ஊர் பார்க்க அழ வேண்டும்  வெண்பற்களை காட்டி சிரிக்கவும் வேண்டும்  ருசி கொண்ட பண்டங்களை… Continue Reading →

16

நான் அறியேன்

​வீசும் காற்றினிலே  விடலை  அவள் கூந்தல் காணவில்லை எவ்விடமும் செல்லாமல்  இவ்விடம் வா என ஈர்க்கும் அவள் கண்களும் காணவில்லை  நித்தம் அந்த தனிமையிலே மௌனத்தில் வசீகரிக்கும் அந்த நிழலும் தோன்றவில்லை  எண்ணத்தில் நிலை கொண்டு  என் எழுத்திலே வளைந்தோடும் அந்த பெண்ணே இதை நீ வாசிப்பாயோ  நான் அறியேன் …. உள்ளத்தில் குடி கொண்டு … Continue Reading →

5

நீயோ ? 

​பூக்கள் தேடும் புகலிடம் நீயோ புன்னகையில் வருடும் மென்சிலிர்ப்பு நீயோ நேர் நின்ற புற்களை வளைய விட்டு அசைந்தோடும் நீரோட்டமோ – அதில் எதிர்த் திசை தேடி குதித்து வரும் சிறு மீனோ ஒற்றை காலில் நிற்பது நீயோ ஓடைத் தோணியில் மிதந்து வருவதும் நீயோ கற்றவன் எழுதிய கவியும் நீயோ கற்பவன் பயிலும் கருத்தும்… Continue Reading →

1

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்