​வெறும் கையில் முகம் மறைத்து

நிலவே உனை காணாமல் 

முட்தரையில் புரளுகிறேன்

விலகிவிடு என்று ஒரு வார்த்தையில் 

உனை கூறிவிட்டு – ஒவ்வொரு

நொடியும் கண்ணீர் வடிக்கிறேன் 

உடைந்த பொம்மையை எறிய 

மறுக்கும் குழந்தைப்போல் – நம் 

நினைவுகளை புதைத்து வைக்கிறேன்
பரந்த வானத்தின் வெண்மேகத்தை

இமைக்காமல் பார்க்கிறேன் 

இருள் வந்து சேர்ந்து – மின்னும் 

நட்சத்திரத்தை காண்கிறேன் 

மேகமாயும் ஒளியுமாயும் நீ 

வருவாய் என்றெண்ணுகிறேன்
நேற்றின் இன்பம் இன்று வலியானது

நீ குளிர் காய்ந்த என் கண்கள்

ஆறாய் மாறியது – வீணாய் 

தரையில் விழுகிறது. 

மடை திறந்த வெள்ளமாய் 

எனை நாடி வருவாயா – என் 

கண்களில் வற்றியதை உள்ளத்தில்

நிரப்புவாயா ????

4