​வசந்தத்தில் பிறந்தவனே

எனை மழைநீராய் நனைத்தவனே

துளித்துளியாய் மேனிப்பட்டு

சட்டென்று இறங்கியவனே

விடியல் பொழுதைப்போன்றே 

பகலெல்லாம் மாற்றி – புது

பார்வையில் நின்றவனே….

குளிரென்ற பெயராலே – உன்

தோள் மீது நான் சாய

என் அருகிலேயே இருப்பவனே …

தனியாக மழை நீரை இரசிக்கிறேன் 

புரண்டோடும் ஓடையாய் – உன் 

இடம் நாடி வருவேன் 

நம் விரல்கள் அணைத்தப்படி 

பாதங்கள் நிற்கட்டும் 

விடைப்பெற்ற மழை நீரை நம் 

கண்கள் இரசிக்கட்டும் ….

7