The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Page 4 of 14

இன்பக் கவி – இன்னுமொரு வரையறை

அழகு தமிழில் ஓர் கவிதை வேண்டும் அடுக்கடுக்காய் எதுகை மோனைதனை அவை ஏந்தி தவழ்தல் வேண்டும் இரு வரியில் முடிந்தாலும் இரு நூற்றைத் தொட்டு தொக்கி நின்றாலும் இரு இமைக் கொள்ளா உணர்ச்சிகள் இரு தயம் உணர்ந்திடல் வேண்டும் இன்பத்தின் எச்சங்களையும் இன்னல் தரு துன்பத்தின் உறுதியினையும் மனிதத்தின் மாண்புதனையும் மண்ணின் ஈரந் தனையும் எண்ணத்தின்… Continue Reading →

32

வாழ்ந்திடும் நொடிகள் யாவும்

அன்றொருநாள் சென்றிருந்தேன் அவள் வீட்டிற்கு அவள் வீட்டு கிழவனுக்கு அறுபதாம் திருமணமாம் நண்பர்களுடன் சேர்த்து வந்த அழைப்பாதனால் நடுங்காமல் சென்றேன் அவள் கூட்டிற்கு வாசல் வந்தழைத்தாள் பொதுவாய் அனைவரையும் வா என்னுடன் என்பதாய் தான் நான் கேட்டேன் அறிமுகங்கள் யாவும் முறுவலாய் முறைப்பதாய் தோன்றிற்று அவையாவும் துளியும் பிடிக்கவில்லை யார் யாரோ யாராய் இருக்கட்டுமே யார்… Continue Reading →

2

நம்பினார் கைவிடப்படார்…

கனாக்கள் பல கண்டு… கவிதைகள் பல கருதி… காகித பூக்கள் சுமந்த காரிகை இவள். கதைகள் பல கேட்டு… காரணம் பல விணவி… காரிருளில் வாழும் கன்னி(இம)யம் இவள். தன்னாசை யாவும் தகர்ந்த போதும் தளராமல் தன்னலமற்று தலைநிமிர்ந்தாள்.. நிமிர்ந்த தலை கனக்கவில்லை… கனமோன்றில் கானாமல் போகிறாள்… யார் யாரோ வந்தனர்… சென்றனர்… நீ மட்டும்… Continue Reading →

4

யாரும் அறியார் பெண்ணே

யார் அறிவார் பெண்ணே முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது பிடித்தது முதல் இரசித்தும் இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை இருந்தும் இது ஏதோ செய்கிறது யார் அறிவார் பெண்ணே ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம் அவை நமக்காய் அரும்புகிறது சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய் நம்முடன் வருவதும் துணையாய்… Continue Reading →

95

வார்த்தைகளுடன் ஓர் வாக்குவாதம்

வர்ணிக்க உகந்த வார்த்தைகள் எல்லாம் குவியலாய் சேர்ந்திருக்க குவியலை சேராமல் ஒதுக்கப் பட்ட சிதறிய வருந்திடும் வார்த்தைகளிடம் அவளைப் பற்றி கூறி வைப்பேன் என் தனிமை நேரங்களில் உற்சாகத்தில் அவைகள் எங்களை கொண்டு அவளதிகாரம் எழுதவும் என்றென்னிடம் பணித்தன அழகியல் வார்த்தைகளே போதாதென்கிறேன் உங்களை வைத்தென் நான் செய்வேன் என்றேன் இலக்கணம் அறிகுவாயோ ? ஏதோ… Continue Reading →

3

இவர் நல்லவர் தான்

நல்லதே நடந்திட வேண்டுமென்று நல்லெண்ணம் கொள்வார்  நல்லவார் இல்லையென்றே பெரு ஏக்கம் கொள்வார்  இது செய்த்திருத்தல் வேண்டும் அது செய்த்திருத்தல் வேண்டும் என ஓர் பட்டியலும் வைத்திருப்பார் – அஃது நடத்திச் செல்ல இவரே பல யுக்திகளை சொல்வார்  உழைப்பவன் நானென்றும் என் கடமை குடும்பத்தை காப்பதே எனவும்   பெரும் அமைதியை கடைப் பிடிப்பார் … Continue Reading →

4

நசுக்கப் பட்டவை எழும் போது ?

உரிமைகள் கருவருக்கப் படும் போதும் சுற்ற உறவுகள் வேடிக்கை காண்கையிலும் ஏது செய்யும் இம்மனம் தலை கவிழ்ந்து செல்ல மதியியந்த செயலை செய்தோம் அல்லவே மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒதுக்கப் படுவோமாயின் சமதர்ம சத்ய நாடிதுவோ உணவிட்டவன் உடல் சுட்டெறிக்கப் படும் போது அகமென்னும் தீ ஏனோ அணைய மறுக்கிறது நசுக்கப் பட்டவை எல்லாம் கிளர்ந்தெழும்… Continue Reading →

2
1 2 3 4 5 6 14

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்