The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Page 6 of 14

தாய்

உறங்கினள் உண்டினள் இல நின் வருகை வரை வருந்தினள் வதங்கினள் நின் நோய்த்தீர் வரை இரசித்தினள் இன்புற்றனள் நின் உணவு தீரும் வரை உச்சி முகர்ந்தாள் உறவை தவிர்த்தாள் முலை கொடுத்தாள் பேறு அடைந்தாள் நின் மழலை நடை நினைவிற் பதித்தாள் – உடன் கொஞ்சல் மொழியை அமிர்தாய் சுவைத்தாள் கொண்டணள் கொடுத்தனள் ஈடில்லா அன்பினள்… Continue Reading →

1

கருப்புச் சந்தை

பல நிறத்தவன் வாழும் உலகினில் ஒரு நிறத்தவன் நாணாத போது  கைக் கூசாமல் வாங்கிய போது  இடம் தெரியாமல் மறைத்த போது  மற்றவன் விழிப் பிதுங்க இருந்த போது  இன்னொருவன் ஏதும் செய்யாமல் பார்த்த போது  அடக்க வேண்டியவன் அடங்கியிருந்த போது  அட போங்கய்யா  மாறும் மாற்றமும் மாறாதது.  #blackmoney #demonetisation

1

எழுதிட வேண்டும்

பார்பவையற்றை யெல்லாம் எழுதிட வேண்டும் – அவை பாவையின் முகமதி போல் இருந்திடல் வேண்டும் துயில் களைந்து எழுந்து முகங்கழுவி தெளியுமுன் – அவள் துஞ்சு முகம் நெளித்த சோம்பலை எழுதிடல் வேண்டும் இதழ் தந்த சொற்கள் யாவும் அப்படியே வேண்டும் – எழுது கோலும் நெளிந்து சிவக்கும் வண்ணம் அவை இருந் தெய்திடல் வேண்டும்… Continue Reading →

22

​ஜதிகளின் நுட்பம்

ஜதிகளின் நுட்பம் மலர் பாதங்களினூடே – இமை கூர்மையில் நெளிகிறது நளினத்தின் நயங்கள் மங்கை இடைச் சொல்லும் – வழியே அசைவினில் துளிர்கிறது சுடர்களின் கதிர்கள் தண் முகமதில் கொட்டிட்டே – கன்ன சிவப்பினில் மிளிர்கிறது விழித்திரையின் காட்சிகள் யாவும் நினைவு தட்டும் – உயர் புதினத்தில் ஒளிர்கிறது கொட்டும் தாளங்கள் நின் சலங்கை பண்ணூடே… Continue Reading →

47

என் கண்ணா

​விரல் கொண்டு இசைத்தாயோ  என் உயிர் மயங்க செய்தாயோ  நித்திரையின் நாடகமோ  புதிர் போடும் காவியமோ  இசைந்திடாத உயிருண்டோ  அசைதிடாத ஜடம் உண்டோ  கசிந்திடும் நீரை போல்  உயிரை சொட்ட சொட்ட பிடித்து புல்லாங்குயலின் விட்டாயோ… ! உறைகின்ற நீரும் ஓர் நாள்  கரைந்திடும்  மறவாது ஒரு நாளும் உன்  முகம் கண்ட என் மனது… Continue Reading →

17

கண்ணா 

​நித்தம் ஒரு மலர் பறித்து  கசங்காமல் நூலில் கோர்த்து  வாடும் தனை முன்பே  கணவான் நின் மாலையாய்  சூட  தினம் நீரது கொண்டு செழிக்க  உயிரது வேருன்ற  வெய்யோனின் கதிர் படர  வளர்ந்தது இந்த மலர் செடியே  பசுமை நிறைந்திருக்க  வந்து பறிக்க பலர் இருக்க  நின் மார்போடு தழுவி மகிழவே  மலர்களை உதிர்க்க செய்தது … Continue Reading →

1

என்னவனே 

​வசந்தத்தில் பிறந்தவனே எனை மழைநீராய் நனைத்தவனே துளித்துளியாய் மேனிப்பட்டு சட்டென்று இறங்கியவனே விடியல் பொழுதைப்போன்றே  பகலெல்லாம் மாற்றி – புது பார்வையில் நின்றவனே…. குளிரென்ற பெயராலே – உன் தோள் மீது நான் சாய என் அருகிலேயே இருப்பவனே … தனியாக மழை நீரை இரசிக்கிறேன்  புரண்டோடும் ஓடையாய் – உன்  இடம் நாடி வருவேன் … Continue Reading →

8
1 4 5 6 7 8 14

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்