The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

வாசகர் கவிதைகள்

யாரேனும் பேசுங்கள் – வாசகர் கவிதை

அடிக்கடி கனவில் வருமந்த மலையுச்சிக் கோவிலும் சரிந்திறங்கும் அருவியும் கிளையமர்ந்த ஒற்றைக்குயிலும் தொந்தரவெனக்கு… அருவிக்கு குயிலின் குரல் … குயிலின் கூவலோ பேரிரைச்சல்… காற்றிலாடாத மணியோடு கோவில் மட்டும் நிசப்தமாய், மிகத் தொந்தரவெனக்கு… இரையும் குயிலையும் பாடும் அருவியையும் தாண்டி பேரமைதிக் கோவில்தான் மிக மிகத் தொந்தரவெனக்கு… அமைதி ,அமானுஷ்யமாகும்போது அத்தனையும் தொந்தரவு… அமைதியாயிருக்கும் அமைதி… Continue Reading →

3

காத்திருக்கும் தலைமகன் – வாசகர் கவிதை

கண் முகிழ்த்தல் கூட கழை செவிமடுக்க ஒலி பீழை காதைக் கடித்த ஊர் துற கால் கிளர்தல் அறிந்து செய் தலையளி முயன்று கான் கழுத்துக் கொடுத்தல் யான் ஆற கை பிடித்தல் நம்பிக்கை உண் முகளித்து மகிழ்ச்சி கொள்- வலி மூளை தொடுமுன் மதி இழக்காது ஆளி நாம் கருமேகம் கண்டு நடனம் கொள்ளும்… Continue Reading →

1

விவசாய மசோதா – வாசகர் கவிதை

கேளாய்…. வறியோனே..! கேளாய்….. வல்லோன் அவன் கூற்றை – வாய்பிளந்து கேளாய்….. இதோ…! சாமானிய பெருமக்களே….! சத்தம் போடாதீர்கள்…. விவசாய பெருங்குடிகளே…! விவாதம் பண்ணாதீர்கள்….. வீதி வரை வந்தால் – மட்டும் விடிந்திடுமா…! என்ன…? தொண்டை கிழிய கத்தினால் – மட்டும் முடிந்திடுமா…! என்ன…? மச மசவென ‌ நிற்காமல்….. மசோதா வருகிறது… மண்டையை ஆட்டுங்கள்……… Continue Reading →

0

அந்த பெரியார் வீதியில் – வாசகர் கவிதை

#அந்த பெரியார் வீதியில் நேர்த்திக்கடன் நடக்காமலுமில்லை #நொந்த கருப்புச்சட்டை எதிர்ப்பை பூர்த்தி செய்யாமலுமில்லை – கல்வி #தந்த காமராசர் தெருவில் பாலகன் யாசகனாகாமலுமில்லை #கந்தையான மனதிலும் அரசாங்கம் சலுகைகள் தராமலுமில்லை #விந்தையான காந்தி பூங்காவில் கொடூரக்கொலை நடக்காமலுமில்லை #மந்தமான நீதியதும் குற்றமதை பதிவு செய்யாமலுமில்லை #சிந்தையைத் தூண்டிய அறிஞர் அண்ணாசிலை எதிரே அந்நியமொழி பள்ளித் திறக்காமலுமில்லை… Continue Reading →

7

கற்பறுத்தல் – வாசகர் கவிதை

பிணம் தின்னும் கழுகுக்கும் நான் பெருமை பாட நினைக்கிறேன் அழகென உலகம் பார்க்க திசைகள் கொட்டி கிடக்குது மனதையும் பறவையாக்கி பறந்து செல்ல வழிவிடு என்ன குறை கண் பட்டதோ முழங்காலில் மோகம் வெடிக்குதா ★ நிமிர்ந்தா குற்றம மோனு கூட்டம் தொடர்ந்து மிரட்டுது ★ சிரித்தால் சபலம் காட்ட முறை த்தால் வெறிய காட்ட… Continue Reading →

1

விலைமாது – வாசகர் கவிதை

ஓர் அமைதியான இருண்ட இரவில் மூனும் தூங்கிய வேளையில் நாளெல்லாம் அஞ்சி நடுங்கி ஆறும் பார்க்காதவண்ணம் ஏழை பிச்சைக்காரி எட்டுமாத தன் பிள்ளைக்கு நைந்துபோன சேலை போர்த்தி பத்திரமாய் பால்கொடுத்தாள். ##### கோவில் குளங்களில் கோபுரங்கள் நீந்துகின்றன. ##### கண்ணகி சிலையை அடையாளமாக சொல்லிவிட்டு காத்திருந்தாள் விலைமாது. ##### ஒளி தொலைந்த இரவுகளில் வழி மறந்த… Continue Reading →

28

நெருடல் – வாசகர் கவிதை

சில ஆண்டுகள் இருக்கும் சௌந்தர் அண்ணனை பார்த்து… எங்கிருந்தோ ஓடி வந்து பக்கத்து வீட்டு கண்மணி அக்காவை பற்றி விசாரித்தார்: கண்மணி அக்கா சௌந்தர் அண்ணனின் கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்திருப்பது பற்றி அவள் வீட்டில் சொல்லிருக்கக்கூடாது என்று இப்போது தோன்றுகிறது… – துரை சந்தோஷ் புதுக்கோட்டை

18

சின்னஞ்சிறு மின்னல்கள்

பேசும் தயக்கத்திற்கும் பேசா தாகத்திற்கும் இடையே தினம் சிக்கி திணறி மூர்ச்சையாகி உனது நினைவொன்றே நிதர்சனமென நில்லாமல் தள்ளி செல்கிறேன் வாழ்வின் வழிகளை வலியோடு ———— சுற்றி உள்ள நட்பிடம் எல்லாம் சுழன்று ஆடி களைத்து விட்டு எச்சம் உள்ள மிச்ச நேரத்திற்கு கை கோர்க்க கொஞ்சம் மென்மழையை வர சொல்லேன் என்று மேகத்திற்கு தூது… Continue Reading →

78

சொல்ல மறந்த கதை!!

-ஒரு சாமானியனின் குரல் பதினாறோ பதினேழோ வயதிருக்கும்முதன்முறையாக இங்கு வந்தப்பொழுது!ஆணும் அழுவான் எனமுதன்முறையாக அறிந்தேன்!அவனின் கதறல்நெஞ்செல்லாம் என்னவோ செய்திற்று!காற்றில் கரைந்துநாசித் துவாரத்தை தீண்டிச் சென்றஅந்த நாற்றம் குடலை பிரட்டிற்று!அவ்வப்பொழுது விரைத்துஎழும் எலும்பினை பார்த்துஉடல் நடுங்கிற்று!அசராமல் அதனைஓங்கி அடிக்கும் அப்பாவை பார்க்கஆச்சரியம் கூடிற்று! இதோ இருபது ஆண்டுகள் ஆயிற்றுஎன் அப்பாவாய் நான் மாறி!இனியேதும் அழுகுரல்நெஞ்சை அடைக்கவில்லை!விரைத்தெழும் எலும்பேதும்… Continue Reading →

27

அகரம் முதல் நீ – வாசகர் கவிதை

அழகே அறியாய், அகத்தில் நிறைத்தேன்  அமிழ்தே தரினும் அகலத் துணியேன்.  அலையில் சுழன்று ஆழியில் தொலைந்த  அசையும் கொடியுடை ஆர்கலி கலனென  அதரச் சுழிவில் இதயம் தொலைத்தேன்.    ஆடிடும் மயிலில் கூடிடும் அழகை  ஆடையிற் வரைந்து சூடிடும் ரதியே,  ஆதவன் கதிரெழும் காலையில் அனுதினம்  ஆம்பல் மலரென அகத்திலே மலர்ந்தாய்.  ஆதலால் தேனதைத் தேடினேன் உன்னிடம்!    இனிய குரலில் ஒருசொல் உரைப்பாய்.  இமயச் சரிவில் இடறி விழினும்  இமையா துணிவு நெஞ்சம் உறைந்தும்,  இதலிற் சிரிப்பை இமைகள் காணின்  இதயத் துடிப்பும் கொஞ்சம் குறையும்.    ஈரோ முதலோ எதுவென் றறியேன்.  ஈட்டிய துணிவெலாம் உன்முன் காணேன்.  ஈரிமை சிமிட்டிய சிறுநொடி போதும்,  ஈட்டியில் தாக்குண்ட எளியவன் நானே!  ஈசல் போலே துடிப்பதை அறியாய்.    உன்னிதழ் உதிர்க்கும் ஒருசொல் போதும்  உதிரத்தில் சோர்ந்திட்ட அணுக்களும் மீளும்.  உன்மொழி கேட்ட சிலகணம் மீண்டும்  உயிர்வரை கேட்டிட ஒருவரம் வேண்டும்.  உலகம் நீயே, ஒப்புதல் தாராய்!      –ராஜேஷ்வர் இளங்கோவன் குளித்தலை, கரூர்

49

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்