தவறென்று தெரியும் போது
தட்டிக் கேட்க முற்படுபவள்.
தனக்கென இடம் பிடிக்க
தடைகள் பல கடப்பவள்.
துச்சமென கருதிய இடத்தில்
துணிந்தே நிற்பவள்.
உடைந்து போகாமல்
உயர்ந்து செல்ல முயல்பவள்.
அன்புக்கு மட்டும்
அடங்கி போக முற்படுபவள்.
வேதனைக்கும்
வேடிக்கை காட்டி வென்று எழுபவள்.
கற்று தேர்ந்து
கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள்.
நம்பிக்கை கொண்டு
நாளும் நடைப் போடுபவள்.
பல அவதாரம் எடுத்து
பகைமையை துறந்தவள்.
அவளுக்கு நிகர் அவளே என்று
அடையாளம் காட்டுபவள்
— பிரியதர்ஷினி
கரப்பாக்கம், சென்னை.
7
Related

தினந்தினம் விழிக்கிறாள் பல கனவுகளோடு அவள் பயணம் தான் தொடருதே ஆயிரம் தடைகளோடு பெண்ணாக பிறந்ததே பாவம் என்ற எண்ணம் தான் தினம் அவள் நெஞ்சோடு பேருந்தில் பயணம் கூட போர்களமாக பல வார்த்தைகளின் வன்முறைகளை தினம் கடந்திவள் போக பணியிடம் தான் சென்றாலும் பாலியல் தொல்லை சக நண்பனாக நினைத்தவனிடம் காதல் தொல்லை காதலெனும் பெயராலும் கலங்கம் விதைக்கிறான் அவள் கனவுகளை கண்ணீரால் சிதைத்து விடுகிறான் காதலிக்க மறுத்தாலும்…
June 25, 2017
In "வாசகர் கவிதைகள்"

தென்கடல் தீண்டிய தென்றலது, இளம் பூவுக்குள் புகுந்திங்கு போகுதடி!! எந்த பூவுக்கும் பாரபட்சம் இல்லையடி!! வண்ணத்திரு எழில் வையகத்துள்-பல நீளக் கதிர்களும் வீசுதடி!! இதில் நிர்க்கதி யாருக்கும் இல்லையடி!! கான குயிலோசசை உணரும் காதில் -ஒரு காதல் இன்பம் ஊறுதடி!! இதில் வயது வரம்பு இல்லையடி!! நீலக் கடலலை வீசிவந்து-எங்கும் நிற்கும் காலைக் கூசுதடி!! இதில் சாதி பேதம் இல்லைடி! மனிதனைத் தவிர மனித இனத்துக்குள் பிரிவினைப் பார்ப்பது யாரடா…
August 25, 2020
In "வாசகர் கவிதைகள்"

தெருவுக்கேதேவதையவள் பூசுமக்கும்பூவையவள் மல்லி , ஜாதி, முல்லைஎனகூவிவரும் அவளுக்குசெவிமடுப்பார் யாருமில்லைஎங்கள்தெருவிலே தேடிவரும்தென்றலுக்கு மலர்வாசனைபரிசளிப்பாள். முழத்தால்அளவெடுத்துமலர்சரத்தை கரத்தால்வழங்கிடுவாள் இதழ்விரித்தகமலம்போல் புன்னகைபூத்திடுவாள் பூவாசம் சுவாசிப்பதால் -அவள் வியர்வைகூடபூவாசம் வண்ணவண்ணரோசாவும் சாமிக்குஅரளியும்-சுமந்துவர மறப்பதில்லை பூவும்நாரும்போல் அவளும்பூவுமாய் நகருதுஅவள்வாழ்க்கை-- Heni Jaya SeelanChennai தமிழ் வேழத்தின் பள்ளியெழுச்சி! நெறியின் றிவளைந்து ஓடி கழுகுஅறியாது தப்பிப் பிழைக்கும்பாம் பல்லநீநேர்வரிசை யில்நகர்ந்து செல்லும் எறும்பினதுநேர்மையுடை யோர்தமிழி னத்தோர் - வருங்காலம் உன்றன்செய் யுள்கூறட் டும்கற் றதுதமிழ்தன்குடலேற் காயுணவாய் மற்ற…
February 25, 2019
In "வாசகர் கவிதைகள்"
உங்கள் கருத்தினை பதிவிடுக