எவராலும் முடியாது..
இவரால் முடியும்.!

உலகம் சிரிக்க தன் குறிக்கோளை நோக்கி உளரும்
இவரால் முடியும்.!

ஊமையாக செல்லும் மானுடக் கூட்டத்தில் குரலை உயர்த்தும்
இவரால் முடியும்.!

துணை இல்லாத போதும் தன்னம்பிக்கையுடன் திகழும்
இவரால் முடியும்.!

துவண்டு செல்லும் போதெல்லாம் தளராமல் தாண்டும்
இவரால் முடியும்.!

பாதை சரியானது என்று நம்பி பயணிக்கும்
இவரால் முடியும்.!

பசுமை இல்லாத வேலைகளிலும் வருந்தாமல் படையெடுக்கும்
இவரால் முடியும்.!

நீதி நிலைபெறாத போதும் நேர்மையில் நிரம்பும்
இவரால் முடியும்.!

நிழல் மட்டுமே உடன் வரும் என்று நகரும்
இவரால் முடியும்.!

‘இவரை’ தேடுபவனால் முடியாது..

‘இவரை’ உணர்கிறானே அவனால் இவ்வரிகளை மாற்ற முடியும்.,
‘என்னால் முடியும் ‘ என்று.!!

எவராலும் முடியாது..
உன்னால் முடியும்.!

-ப. ர. யோகேஷ் கிருஷ்ணன்

0