நீ என்னும் பெருங்கூச்சல்
இடைவிடாது ஒலித்திருக்க
இமைகளை மூடிக்கொண்டு
இருமையின் இறுதியில்
ஆனந்த கூத்தாடுகிறேன்

கூச்சலே மௌனமாகவும்
மௌனத்தில் மனோரகமாகவும்
எங்கும் நீ திளைத்திருக்க

சுற்றியிருக்கும் மையிருட்டை
அள்ளி அள்ளி எழுதுகோலில் திணிக்கிறேன்
வற்றாத ஆறும் வரண்டு போவதாய்
மை தீர்ந்து போக எழுதுகிறேன்
மீண்டும் இருள் மூழ்கி மை குளிக்கிறேன்

நீ

வார்த்தைகளில் வடித்தே தீரவேண்டிய வள்

கருமை இருளில் சிறிதே வெளிச்சத்தில்
பார்த்தே தீர வேண்டியவை உன் கண்கள்

தீரா தாகத்தால் பருகியே தீர வேண்டியவை உன் பேச்சு

பெண்ணே

சோர்ந்து போய் அமரும் போதெல்லாம் நின்
கயல்விழி எனை காண வேண்டும்

தீந் துன்பம் வந்து இரவை நீட்டும் போது
ஆதரவாய் நின் தோள் வேண்டும்

தன்னந்தனிமையிலே யாழிசையாய் நின்
மெல்லிய குரலொளி வேண்டும்

யான் செய்யும் தொழிலினிலே நின்
கூரிய அறிவு துணை புரிய வேண்டும்

நீ நீயாய் வேண்டும்

நின் எண்ணங்களை பழக்க வழக்கங்களை
மாற்றாமல் நீ நீயாய் வேண்டும்

தமிழோடு இலக்கியமாய் நாம் சேர்ந்தே இருப்போம்

50