மெலிவு விரிவு
பாதை கொண்ட
வாழ்க்கை இது…

நாடி நடக்கும்
நடையில் தங்கும்.
நாளை தொடரும்
நாட்டங்கள்.

தேடிப் போகும் பாதை
நெடுகிலும்,
தேய்ந்து போன
ஏக்கங்கள்!

மேட்டிலெல்லாம்
உருளும் கற்கள்,
பள்ளமெல்லாம்
பருத்த கள்ளி!

பாய்ந்து செல்லும்
ஆசைக் குதிரை…
ஆய்ந்து கொல்லும்
ஆழ்ந்துள்ளப்
பய வியர்வை!

ஏங்கி நிற்கிறது!
எதிர்பார்ப்பு…
அங்கு நெடும்பாதை முழுக்கவும்
மலர் பாதடி தேடிக்கொண்டு?

ஏது முளைக்கும் மலர் வனங்கள்?
பாறை மேலிலும்,
கள்ளிப் புதரிலும்…!

ஒரு சுடு மணல்க் காடு
வாழ்க்கை.
வரும் காற்றிலும் ஈரம்
பஞ்சம்!

முளைத்தாலும்
மரங்களங்கே,
முள்ளில்லா
மலர்கள் என்று
முளை விடுமா ஊற்றுக்கள்?
பரிதாப தொணி
நிலை கொண்டு.

விழுங்கிடும் வயிறு
விதிக்கு உண்டு.
அழுந்திய நெஞ்சக்
கனாவை,
அருந்திடும் ஆசை என்ன!

இடைக்கிடை தடுக்கிட
இமை நீட்டும்
புதை கற்கள்,
துரத்திக்கொண்ட ஓட்டம்
புரப்பட்ட வாழ்க்கை இது…

தடைகள் என்ன,
உடைத்துச் செல்ல
தாவி ஓடும் குதிரை இது!

தூவி வைத்த
சாவி எல்லாம்
சேகரித்து வெற்றி திறப்பேன்!

தூரப் பாதை …
நெலிந்த பயணம்…
ஒழிந்த உச்சிக் குண்றினைக்
கடக்க,
ஒளிந்த நேர
நுழைவினுள் நான்.

– Shahi sadique
Kegalle

0