ஒரு ரொட்டி பாக்கெட் எடுத்ததற்கு
சூடு பெற்றபோது
அவன் சிறிதும் கத்தவில்லை
அம்மாவை அழைக்கவில்லை
இனி செய்யமாட்டேனென கெஞ்சவில்லை..
வலியின் அறிகுறி அவன் முகத்தில் தெரியவில்லை..
கொஞ்சதூரம் சென்றபின் சூடு வைக்கப்பட்ட இடத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டான்
பசித்த வயிற்றின் வெப்பத்தைப் போல அது அவ்வளவாக சுடவில்லை.

– ந.சிவநேசன்
சேலம்

11